'சமூக நீதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம்' - செல்வப்பெருந்தகை


சமூக நீதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம் - செல்வப்பெருந்தகை
x

அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம்தான் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சமூக நீதி அடிப்படையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கடந்த முறை சிறுபான்மை மக்களுக்கு தொகுதி ஒதுக்காமல் விடுபட்டுவிட்டது. இந்த முறை சிறுபான்மையினருக்கு கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அதன்படி கிறிஸ்தவருக்கு கொடுத்திருக்கிறோம். இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கேட்ட தொகுதி அமையவில்லை.

எங்கள் இந்தியா கூட்டணியில் ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவரும் எங்களுடைய வேட்பாளர். இந்தியா கூட்டணியின் வேட்பாளர். ஏற்கனவே வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராக அசன் இருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்குமான இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம்தான். சமூக நீதி அடிப்படையிலேயே எங்கள் வேட்பாளர்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Next Story