கோடை வெயிலாக இருந்தாலும் சரி, மழை காலமாக இருந்தாலும் சரி, சிலர் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
ஒருவருக்கு நாளே டீ-யில் தான் தொடங்கும். டீ குடித்தால் தான் ஒரு வேலையை செய்ய முடியும் என்று நம்புவார்கள். கோடை காலத்தில் டீ குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
கோடை வெயிலில் டீ குடிப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் சூடான பானத்தை உட்கொண்ட பிறகு இருக்கும் வெப்ப சேமிப்பு, குளிர்பானங்கள் அருந்திய பிறகு இருக்கும் வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
வெயிலில் டீ அருந்தியுடன், உடலில் வெப்பம் அதிகரித்து வியர்வை சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. அதன் பின்னர் அந்த வியர்வை ஆவியாகி உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது.
குளிர்பானங்கள் அல்லது குளிர்ச்சியாக ஏதேனும் சாப்பிட்டால் உடலில் வெப்பம் அதிகரிக்க செய்கிறது.
குளிர்ச்சியான பானத்தை உட்கொண்ட பிறகு தோலின் மேற்பரப்பிலிருந்து வியர்வை ஆவியாதல் குறைவதால் வெப்பம் உடலில் இருப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகின்றன.
இந்த குறிப்பிட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு மருத்துவரை அணுகவும்.