சாதம் முதல் சப்பாத்தி வரை..தொட்டு சாப்பிட சுவையான காளான் மிளகு மசாலா..!

சாதம், தோசை, நாண், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் மிளகு மசாலா.
தேவையான பொருட்கள் : காளான், பூண்டு, வெங்காயம், குடை மிளகாய், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு தூள், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு ஆகியவை.
செய்முறை : முதலில் வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பூண்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கினால் போதுமானது. அடுத்து அதில் மஞ்சள் தூள், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் காளான், உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றத்தேவையில்லை. இதிலேயே தண்ணீர் இருக்கும்.
காளான் வெந்தவுடன் அதில் மிளகு தூள், கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான காளான் மிளகு மசாலா ரெடி.