நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மூலிகைகள்.. வீட்டிலேயே வளர்க்கலாம் வாங்க!

துளசி: துளசிக்கு மருத்துவ குணம் அதிகம் என்பது அறிந்ததே. சிறந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடியதாகவும் விளங்குகிறது. .இதை வெறும் வயிற்றில் சாறாகவும் அல்லது இலைகளாகவும் (3-4) எடுத்துக் கொள்ளலாம்.
Photo: wikipedia
கற்றாழை: உடலில் உள்ள நச்சுக்களை கற்றாழை நீக்குகிறது. ஒவ்வொரு முறை உணவு உண்பதற்குமுன், அதன் சத்தான சதை பகுதியை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
Photo: wikipedia
நெல்லிக்காய்: உடல்நலனை காக்கும் சிறப்புமிக்க மூலிகை நெல்லி ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின்-சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
Photo: wikipedia
வில்வம்: உலர்ந்த வில்வ இலையை கொண்டு செய்த பொடி இயல்பாகவே ரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
Photo: wikipedia
ஆவாரை: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மற்ற மூலிகைப் போல ஆவாரையும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். பொதுவாக இது தோல் பிரச்சினைக்கும் மருந்தாகிறது.. ஆவாரை வேரை பொடித்து உண்பதன் மூலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம்.
Photo: wikipedia
வேம்பு: வேம்பு நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியாகவும் அழற்சி நீக்கியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், மலேரியாவை எதிர்க்கவும், பாக்டீரியா, நச்சுயிர் எதிர்ப்பு பொருளாகவும் விளங்குகிறது.
Photo: wikipedia
நாவல்பழம்: நாவல்பழத்தின் விதைகளின் பொடியானது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. நாவல் இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குவதோடு இதயம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.
Photo: wikipedia
Explore