காரசாரமான எலுமிச்சை ரசம் செய்வது எப்படி ?

எலுமிச்சை ரசம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இப்போது எலுமிச்சை ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் : எலுமிச்சை, தக்காளி, மிளகு, சீரகம், தனியா, பூண்டு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், கடுகு, உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், பெருங்காயத்தூள் ஆகியவை.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்து கொள்ளவும்.
பூண்டு, மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு, அரைத்த மசாலா, மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.
ரசம் நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கி மூடி விடவும். எலுமிச்சை சாறு ஊற்றியவுடன் கொதிக்க விடக்கூடாது. சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.
குறிப்பு : ரசம் அதிகம் கொதித்துவிட்டால் கசந்துவிடும்.