இந்த குறிப்புகளை பின் பற்றினால்.. வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி வாய் துர்நாற்றத்தை உண்டுபண்ணலாம்.
சிகரெட், சுருட்டு, பீடி, மூக்குப்பொடி முதலியவைகளை உபயோகிப்பவர்களுக்கு பற்களில் கறை படிந்து துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
மூக்கின் வழியாக சுவாசிக்காமல்,வாய் வழியாக சுவாசிப்பதனால் துர்நாற்றம் ஏற்படும்.
வாய் உலர்ந்து போதல்,வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும்.
வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கிருமி, நாக்கில் சேருவதால் வாய் நாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.
பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற சில உணவுகள் தற்காலிகமாக வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
குறிப்பு :அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
Explore