பழைய சாதத்தின் மகத்துவம் தெரிந்தால் வீணாக்க மாட்டீர்கள்..!
பழையதை சாதத்தை வைத்து, அதாவது முன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.
அதில் கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல அவர்கள் தேவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான இந்த பழையதையும் தயிரையும் உண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது
உடல் சோர்வை போக்குகிறது
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது
உடல் சூட்டை தணிக்கிறது
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது
உற்சாகமான மனநிலையை தருகிறது என்று பலவிதமான நன்மைகளை பட்டியலிட்டனர்.