குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பால் பணியாரம்?

பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள் : பச்சரிசி உளுந்து, பால், தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், எண்ணெய், உப்பு ஆகியவை.
பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
பின்னர் நைஸாக உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
பாலைக் காய்ச்சி இறக்கி சிறிது ஆறியதும் தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.
மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
பின்னர் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் போட்டு 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.
குறிப்பு : மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.