மழைக்காலத்தில் சளி, இருமல் ஏற்படுவதை தவிர்க்க எளிய தீர்வு!

credit: freepik
அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது சிறப்பானது. அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை நீக்கும்.
credit: freepik
சுடு நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் பருகலாம்.
credit: freepik
காலை வேளையில் சூடான நீரில் லவங்கபட்டை தூள் மற்றும் தேன் கலந்து பருகி வரலாம். அதுவும் தொண்டைக்கு இதமளிக்கும்.
credit: freepik
ஏலக்காய்யை பொடித்து டீயாக தயாரித்தும் பருகலாம். அது மழைக்கால நோய் தொற்றுகளில் இருந்து காக்க உதவும்.
credit: freepik
வெங்காயம், இஞ்சி சாறு, தேன் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து பருகுவதும் சளி தொந்தரவுக்கு தீர்வளிக்கும்.
credit: freepik
குங்குமப்பூவை பாலுடன் கலந்து பருகுவதும் சளி பிரச்சினையை போக்க உதவும்.
credit: freepik
மழைக்காலங்களில் மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகி வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
credit: freepik
பூண்டு-வை சூப்பாகவோ, சமையலில் சேர்த்தோ சாப்பிட்டு வரலாம். அதுவும் சளி, இருமலை சுலபமாக கட்டுப்படுத்திவிடும்.
credit: freepik
Explore