பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்...!

புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.
வேப்பங்குச்சியினால் பல் துலக்கி வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
கிராம்பு, ஓமம், கற்பூரம் ஆகியவற்றை எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ளபல் ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் தீரும்.
கொய்யா இலையை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளிக்க பல் கூச்சம் விலகிவிடும்.
வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல்தேய்க்க வேண்டும்.
அடிக்கடி முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
கிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு, இதனை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புத் தூள் கலந்து, பற்களைநன்றாக தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து வந்தால் ஈறுகள்பலம் பெறும்.
இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் பல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.