வெயில் காலத்தில் சருமத்திற்கு ரோஸ் பன்னீர் யூஸ் பண்ணுங்க..! அப்புறம் பாருங்க!!

வெயில் காலத்தில் சருமத்திற்கு ரோஸ் பன்னீர் யூஸ் பண்ணுங்க..! அப்புறம் பாருங்க!!

Published on
சருமத்தை மட்டுமல்லாமல் எந்த ஒரு பொருளையும் மிருதுவாகவும், மென்மையாகவும். வைத்துக்கொள்ளும் தன்மை பன்னீருக்கு உண்டு.
வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு பன்னீர் அருமருந்து.
அழுக்கு படிந்த முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புத்துணர்வு அளிக்கும் தன்மை வாய்ந்தது.
தினசரி முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம்களில் பன்னீரை கலந்து உபயோகித்தால் சருமம் மிருதுவாகலாம்.
உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க, பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம்.
பன்னிர் பயன்படுத்துவதன் மூலம், சோர்வான தசைகள் புத்துணர்வு பெறுவதோடு புதுப்பொலிவையும் பெறும்.
இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றப்பொருட்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியவை.
பன்னீர் சருமம் மட்டுமின்றி தலைமுடிக்கும் சிறந்து விளங்குகிறது. பொடுகு தொல்லையில் இருந்து தீர்வு அளிக்கக்கூடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com