மொறுமொறுப்பான கார தட்டை எளிதில் செய்யலாம் வாங்க!

Photo: MetaAI
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு -2 கப், உளுந்தம் பருப்பு -1/4 கப் (வறுத்து அரைத்தது), பொட்டுக்கடலை மாவு- 4 கப், கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன் (ஊறவைத்தது), நுணுக்கிய பூண்டு -10, கறிவேப்பிலை - தேவையான அளவு, பெருங்காயம் -½ ஸ்பூன், மிளகாய்த் தூள் -1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு
Photo: MetaAI
செய்முறை: இரண்டு கப் அளவு பச்சரிசி மாவை ஒரு கடாயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து உலர்வாக வறுக்க வேண்டும். மாவில் ஈரப்பதமே இருக்கக் கூடாது. வறுத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி, நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.
Photo: MetaAI
கடலைப் பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். வறுத்து அரைத்த உளுந்த மாவை எடுத்துக் கொள்ளவும். வறுத்த மாவுகளை ஒரு தனி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
Photo: MetaAI
அதனுடன், பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, நுணுக்கிய பூண்டு மற்றும் ஊறவைத்த கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
Photo: MetaAI
தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார்.
Photo: MetaAI
இந்த மாவை உருண்டை பிடித்து, உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அழுத்தவும்.
Photo: MetaAI
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதனை நன்கு பொரிக்கவும். இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடியச்செய்தால், சுவையான, காரமான தட்டை தயார்.
Photo: MetaAI
Explore