திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சனிக்கிழமையை யொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். கர்நாடக மாநில தலைமை தேர்தால் அதிகாரி தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

திருநள்ளாறு

சனிக்கிழமையை யொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். கர்நாடக மாநில தலைமை தேர்தால் அதிகாரி தரிசனம் செய்தனர்.

சனீஸ்வரர் கோவில்

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், திரளான பக்தர்கள் குவிந்தனர்.

புனித நீராடிய பக்தர்கள்

கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடிய பக்தர்கள் சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பசவராஜ் சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பசவராஜை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com