திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தொடர் விடுமுறையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

காரைக்கால்

தொடர் விடுமுறையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சனீஸ்வரர் கோவில்

திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. அதுசமயம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

பக்தர்கள் குவிந்தனர்

இந்தநிலையில் சனி, ஞாயிறு, காந்திஜெயந்தி என தொடர் விடுமுறை என்பதாலும், காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதாலும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர். பின்னர் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடிய பக்தர்கள் சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com