கடலூரில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை

கடலூரில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை
Published on

கடலூர்,

கடலூர் புதுக்குப்பம் பழமலைநாதர்நகரை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மகன் தியாகராஜன்( வயது 36). போலீஸ்காரரான இவர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு நிஷா என்கிற மகளும், திலீபன் என்கிற மகனும் உள்ளனர். நேற்று விடுமுறையில் இருந்து தியாகராஜன் மதியம் 2 மணி அளவில் திடீரென வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்த அவருடைய மனைவி மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இருப்பினும் அவர் குடும்ப பிரச்சினையால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com