உப்பிடமங்கலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

உப்பிடமங்கலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர்
கரூர்
Published on

கரூர்,

கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட உப்பிடமங்கலம், எஸ்.வெள்ளாளப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சின்னக்கிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரிகவுண்டனூர், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர் ரோடு, தொழிற்பேட்டை, ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மேலப்பாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com