நாகை அருகே குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி

நாகை அருகே குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
நாகை அருகே குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி
Published on

நாகப்பட்டினம்,

நாகை அருகே பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய மகன்கள் வித்யாதரன் (9), சுவாதீஷ் (6). இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி பனங்குடி கிராமத்தில் உள்ள ஆணைக்குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கக்கோரி இறந்த சிறுவர்களின் பெற்றோர் அரசு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுவர்களின் பெற்றோருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ஒரு சிறுவனுக்கு ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கும் ரூ.10 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்காக காசோலையை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். அப்போது முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com