மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி மூர்த்தியூர் கரியன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 40). மணல் கடத்தல் வழக்கில் இவரை கடந்த ஜனவரி மாதம் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜயன் மீது ஏற்கனவே ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2 மணல் திருட்டு வழக்கு உள்ளது. இதனால் அவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார்.

அதன் பேரில் விஜயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com