

இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக உணவு பாதுகாப்பு தின இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம், சைவ உணவு, அசைவ உணவு என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் 32 பேர் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை பரிமாற்றம் செய்தனர். கருத்தரங்கை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களான பேராசிரியர்கள் அஸ்மத்து பாத்திமா, அப்ரோஸ், பீர் முகமது, சையது யூசுப் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.