சினிமா துளிகள்
கவலையுடன், சில பட அதிபர்கள்!
மூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
ஒருவழியாக சமரசம் பேசி, கதாநாயகன் நடிக்க வந்தார். படப்பிடிப்பும் மிக வேகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கொரானா பீதி காரணமாக அந்த படப் பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
மறுபடியும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்ற எதிர் பார்ப்புடன் காணப்படுகிறார், தயாரிப்பாளர். இவரைப் போலவே பாதிக்கப்பட்ட சில பட அதிபர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

