அசாம்: கவுகாத்தியில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்

கவுகாத்தியில் 102 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் அதிகாரி சுமித் சத்வான் தெரிவித்தார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

திஸ்பூர்,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் கவுகாத்தி மக்களவை தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுகாத்தி அதிகாரி சுமித் சத்வான், "கவுகாத்தி தொகுதிக்கு மே 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அவற்றில் 102 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த வாக்குச் சாவடிகளில் அனைத்து பணியாளர்களும் பெண்களாக இருப்பார்கள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com