மும்பை: அம்பேத்கார், சாவர்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை

மும்பையில் உள்ள அம்பேத்கார், சாவர்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 5-வது கட்ட தேர்தல் வரும் 20-ந்தேதி நடைபெற உள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. 23 தொகுதிகளை கைப்பற்றியது. சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை மராட்டிய மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மும்பைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து மும்பை சைத்யா பூமி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நினைவிடத்திற்கு சென்ற அவர், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சாவர்கர் நினைவிடத்திலும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com