விஷப்பாம்பை கூட நம்பலாம், பா.ஜ.க.வை நம்ப முடியாது - மம்தா பானர்ஜி விமர்சனம்

சி.பி.ஐ., ஈ.டி, போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
விஷப்பாம்பை கூட நம்பலாம், பா.ஜ.க.வை நம்ப முடியாது - மம்தா பானர்ஜி விமர்சனம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நமது அரசு சிறப்பாக செயல்பட்டது. எங்கள் கட்சிக்கு பேரழிவு ஏற்பட்டது. செல்வம் பா.ஜனதாவுக்கு சென்றது. விஷப் பாம்பை கூட நம்பலாம், செல்லமாக கூட வளர்க்கலாம், ஆனால் பா.ஜ.க.,வை நம்பவே முடியாது.பா.ஜ.க. நாட்டை சீரழிக்கிறது. சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் ஈ.டி, போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) அஞ்சமாட்டோம். விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜனதா பயன்படுத்துகிறது.

விசாரணை அமைப்புகள் பா.ஜனதாவுக்காக செயல்படுவதால், சமநிலையை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியை பா.ஜனதா மட்டும் பின்பற்றுகிறது. மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டப்பூர்வ குடிமக்களை வெளிநாட்டினராக மாற்றுவதற்கான ஒரு பொறியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com