கோவில்பட்டி,
கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 11-வது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
போட்டியின் 3-வது நாளான நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும், சென்னை ஐ.சி.எப். அணியும் மோதின.
இதில் 3-2 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் அணி வெற்றி பெற்றது. 20-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் ஷிஷி கவுடா பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 28-வது நிமிடத்தில் அதே அணி வீரர் சந்தீப்குமார்சிங் ஒரு பீல்டு கோல் போட்டார். 31-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் சஞ்சய் ஷால்ஷோ பீல்டு கோல் போட்டார். 51-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் ஷிஷி கவுடா பீல்டு கோல் போட்டார். 60-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஷியாம்குமார் பீல்டு கோல் போட்டார்.
மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதியது. இதில் 6-0 என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு ரெயில்வே அணி வெற்றி பெற்றது.
இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் மும்பை ஆல் இந்தியா கஸ்டம் மற்றும் ஜி.எஸ்.டி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதியது.