இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20: இந்திய அணி முதலில் பந்துவீச்சு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20: இந்திய அணி முதலில் பந்துவீச்சு
Published on

ஆமதாபாத்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இன்றைய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் பின்வருமாறு;-

இந்தியா: லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com