4வது டி20 போட்டி: இங்கிலாந்து வெற்றி பெற 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இந்தியா 186 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
4வது டி20 போட்டி: இங்கிலாந்து வெற்றி பெற 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Published on

ஆமதாபாத்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் (12), கே.எல். ராகுல் (14) எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் கோலி (1) ரன்னில் வெளியேறியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அறிமுக போட்டியில் விளையாடி வரும் சூர்ய குமார் யாதவ், அடில் ரஷீத் வீசிய பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். 28 பந்துகளில் அவர் அரை சதம் எடுத்துள்ளார். எனினும், 57 (31 பந்துகள் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள்) ரன்களில் சூர்ய குமார் யாதவ், மலானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

14 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதன்பின்னர் ரிஷாப் பண்ட் (30) மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் (37) அடித்து ஆடி ரன் விகிதங்களை அதிகரித்து ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் ஹர்திக் பாண்ட்யா (11), வாஷிங்டன் சுந்தர் (4) ரன்களில் வெளியேறினர். தாக்கூர் (10), புவனேஸ்வர் குமார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து இருந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 186 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com