

சென்னை,
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் 84 ரன்கள் குவித்தார். அத்துடன் அவர் தொடர்ச்சியாக 5-வது அரைசதத்தை அடித்துள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து அதிக அரைசதங்கள் அடித்தவர்களான ஷேவாக், ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர் (இவர்களும் தொடர்ச்சியாக தலா 5 அரைசதம்) ஆகியோருடன் சாதனை பட்டியலில் சுதர்சன் இணைந்தார்.
நடப்பு தொட ரில் 14 ஆட்டங்களில் ஆடியுள்ள சாய் சுதர்சன் ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 638 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை மீண்டும் வசப்படுத்தினார். 2-வது இடத்தில் சுப்மன் கில் (6 அரைசதத்துடன் 616 ரன்) உள்ளார்.