இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆனந்த் டேட் நியமனம்; பி.சி.சி.ஐ. தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற ஜனவரி 15ந்தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ஆனந்த் டேட் பி.சி.சி.ஐ.யால் இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆனந்த் டேட் நியமனம்; பி.சி.சி.ஐ. தகவல்
Published on

புதுடெல்லி,

இது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர், சர்வதேச டி20 தொடர் மற்றும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி ஆகியவற்றிற்கான இந்திய அணியின் உடற்கூறு மேம்படுத்துதல் திறன் பயிற்சியாளர் சங்கர் பாசு தனிப்பட்ட காரணங்களுக்காக சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்த தொடர்களுக்கான இந்திய அணியின் உடற்கூறு மேம்படுத்துதல் திறன் பயிற்சியாளராக ஆனந்த் டேட் நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com