ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: வங்காளதேச அணிக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 135 ரன்கள் எடுத்தது.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.
இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் 2 ஆட்டங்களில் ஆடி தலா 1 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளன. ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்று விட்டது. இந்நிலையில், இன்று நடைபெறும் பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கம் முதல் வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியில் முகமது ஹாரிஸ் மட்டும் நிலைத்து ஆடி 31 ரன்கள் எடுத்தார் . முஹம்மது நவாஸ் 25 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 135 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் அணியில் சிறப்பாக பந்துவீசிய தஸ்கின் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 136 ரன்கள் இலக்குடன் வங்காளதேசம் அணி விளையாடுகிறது.






