வங்காளதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

வங்காளதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
Published on

டாக்கா,

2026 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடருக்கான மின் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அதேவேளை, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் இந்து மதத்தினர் 4  பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வங்காளதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமான் பங்கேற்க பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிசிசிஐ கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணி விடுவித்தது.

இதனால், வங்காளதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்தது. மேலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவும் காலவரையற்ற தடை விதித்து வங்காளதேச அரசு உத்தரவிட்டது.   

இந்த நிலையில், வங்காளதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என வங்கதேசத்தில் புதிதாக அமைந்துள்ள பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com