இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடையை அறிமுகம் செய்தது பிசிசிஐ..!

அக்டோபர் 17-ந்தேதி உலகக்கோப்பை தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடையை அறிமுகம் செய்தது பிசிசிஐ..!
Published on

மும்பை,

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 20- ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்த 7-வது சீசன் தொடங்குவதற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தத் தொடரில் இந்திய அணி புது சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள். இந்த சீருடையை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வருகிற 24-ந்தேதி முதல் ஆட்டமாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 17-ந்தேதி உலகக்கோப்பை தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 18-ந்தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்கள் புது சீருடையை அணிந்து விளையாடுவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com