சாம்பியன்ஸ் டிராபி தொடர்; வரும் 12ம் தேதிக்குள் அணியை அறிவிக்க வேண்டும் - ஐ.சி.சி

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
Image Courtesy: ICC
Image Courtesy: ICC
Published on

துபாய்,

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இது பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

இருப்பினும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை வரும் 12-3 தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் வீரர்கள் காயம் காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம். வீரர்களை மாற்ற பிப்ரவரி 13-ந் தேதி வரை அனுமதி உள்ளது. இங்கிலாந்து அணி மட்டுமே இந்த தொடருக்கான அணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com