செக் மோசடி வழக்கு: ஷகிப் அல் ஹசனை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

image courtesy: AFP
ஷகிப் அல் ஹசனை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஷகிப் அல் ஹசன் மீது கடந்த டிசம்பர் 15-ம் தேதி 'செக்' மோசடி வழக்கில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் அவர் ஜனவரி 19-ம் தேதிக்குள் ஆஜராகும் படி டாக்கா கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் ஷகிப் அல் ஹசன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்காளதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





