

சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரு ஆட்டங்களுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 26-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் (மாலை 3.30 மணி) இடையிலான ஆட்டம் தற்போது அதே தேதியில் சென்னைக்கு மாற் றப்பட்டுள்ளது.
சென்னையில் மே 21-ந்தேதி நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜ ராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் (இரவு 7.30 மணி) அதே தேதியில் ஆமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வருகிற 26-ந்தேதி குஜராத்தில் உள் ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.