சென்னை ஓபன் டென்னிஸ்: பிரான்சின் கிரியான் ஜாக்குயட் சாம்பியன்

இறுதிப்போட்டியில் கிரியான் ஜாக்குயட் - எலியாஸ் யமெர் மோதினர்.
சென்னை ஓபன் டென்னிஸ்: பிரான்சின் கிரியான் ஜாக்குயட் சாம்பியன்
Published on

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பிரான்சின் கிரியான் ஜாக்குயட், சுவீடனின் எலியாஸ் யமெரை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கிரியான் ஜாக்குயட் முதல் இரு செட்டுகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றார். 1 மணி 37 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜாக்குயட் 7-6 (1), 6-4 என்ற நேர் செட்டில் யமெரை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com