சி.எஸ்.கே-வில் பிரெவிஸ் சேர்க்கப்பட்ட விவகாரம் - புதிய விளக்கம் அளித்த அஸ்வின்

கோப்புப்புடம்
குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் குர்ஜப்னீத் சிங். இவர் காயத்தால் 2025 ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு முன் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலத்தில் எடுக்கப்படாத பேபி ஏபி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸை 2.2 கோடி ரூபாய் கொடுத்து சி.எஸ்.கே ஒப்பந்தம் செய்தது.
தற்போது அடுத்த சீசனுக்கான (Trade) டிரேடிங் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது.
இதற்கிடையே Trade-க்கு பெரும்தொகை தேவைப்படும். இதனால் நான் கூட வெளியேற்றப்படலாம் என்ற தோனியில் அஸ்வின் பேசியிருந்தார். மேலும், டெவால்ட் பிரெவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார். திரைமறைவில் அதிகத்தொகை இருந்திருக்கலாம் என்பது போன்றும் பேசியிருந்தார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சி.எஸ்.கே அணி அஸ்வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஐ.பி.எல் விதிமுறைக்கு இணங்க நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளது.இந்நிலையில், டெவால்ட் பிரெவிஸ் சி.எஸ்.கே. அணியில் சேர்க்கப்பட்டது குறித்து அந்த அணியின் வீரர் அஸ்வின் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், டெவால்ட் பிரேவிஸை சரியான நேரத்தில் அணியில் எடுத்தது சிஎஸ்கேவின் MASTERSTROKE என பொருள்படும் வகையில்தான் நான் பேசியிருந்தேன். ஐ.பி.எல் விதிமுறைகளை எந்த வகையிலும் சி.எஸ்.கே மீறவில்லை. அடுத்த சீசனுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். மஞ்ச சொக்காவை போட்டுக்கொண்டு பாகுபலி மீண்டும் இறங்குவார். என்று தெரிவித்தார்.






