வீரர்கள் தேர்வில் இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது- பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து

20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
Image Tweeted By @BCCI
Image Tweeted By @BCCI
Published on

மும்பை,

ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் அதை தவறவிட்டது.

இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது. 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் சுமாரான பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வு செய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தானிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் அவர் கூறியதாவது:-

இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது. ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளதால் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய பார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

மேலும் அவர்கள் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் அவரை தேர்வு செய்ததில் எந்த பயனுமில்லை. அதற்கு பதிலாக கூடுதல் பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com