ஆர்சிபி அணியை வாங்க பிரபல கால்பந்து கிளப் உரிமையாளர் தீவிரம்

ஆர்சிபி அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.


ஆர்சிபி அணியை வாங்க  பிரபல கால்பந்து கிளப் உரிமையாளர் தீவிரம்
Published on

பெங்களூரு,

கடந்த ஆண்டு முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது. அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் கடந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. இந்த வெற்றியை அணியின் வீரர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர்.

இருப்பினும் ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் ஆர்சிபி அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்தார். முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆர்சிபி கிரிக்கெட் அணியை வாங்குவதற்கு, உலகப்புகழ் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பின் உரிமையாளரான கிளேசர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com