டி20 வரலாற்றில் முதல் முறை.. வங்காளதேசத்துக்கு எதிராக தொடரை கைப்பற்றிய யு.ஏ.இ.


டி20 வரலாற்றில் முதல் முறை.. வங்காளதேசத்துக்கு எதிராக தொடரை கைப்பற்றிய யு.ஏ.இ.
x

image courtesy:twitter/@ICC

யு.ஏ.இ. - வங்காளதேசம் இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

ஷார்ஜா,

வங்காளதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ஜேக்கர் அலி 41 ரன்கள் அடித்தார். யு.ஏ.இ. தரப்பில் ஹேய்டர் அலி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யு.ஏ.இ. அணி 19.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற யு.ஏ.இ. அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வங்காளதேசத்திற்கு எதிரான தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக அலிஷான் ஷராபு 68 ரன்களும், ஆசிப் கான் 41 ரன்களும் அடித்தனர். அலிஷான் ஷராபு ஆட்ட நாயகனாகவும் முகமது வாசீம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

1 More update

Next Story