2வது டெஸ்ட்டுக்கு முன் இந்திய வீரர்களுக்கு விருந்து அளிக்க கம்பீர் முடிவு

இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ந் தேதி தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வரும் 10-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நாளை (8-ந் தேதி) இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்களுக்கு இரவு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அனைவரையும் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com