பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஹாரி புரூக் தேர்வு

பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஹாரி புரூக் தேர்வு
Published on

துபாய்,

தனது பேட்டிங் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இளம் இங்கிலாந்து வீர ஹாரி புரூக் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்,

இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி ஆகியோரின் கடுமையான போட்டியை முறியடித்து, வளர்ந்து வரும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி புரூக் விருதுக்கான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மட்டுமே தனது டெஸ்டில் அறிமுகமான போதிலும், இங்கிலாந்து வீரர் புரூக் ஏற்கனவே இங்கிலாந்தின் புதிய ஆபத்தான மனிதராக உருவெடுத்து வருகிறார், மேலும் டிசம்பரில் ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பிறகு, அவரது வேகம் இன்னும் அதிகரித்துள்ளது.

பிப்ரவரியில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உள்பட ஒரு இன்னிங்ஸில் 186 ரன்களை விளாசியிருந்தார். மொத்தம் நடந்த இரண்டு டெஸ்டில் அவர் 329 ரன்கள் எடுத்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புரூக், "இந்த விருதை சில மாதங்களில் இரண்டு முறை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பலத்திற்கு ஏற்றவாறு விளையாடுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த எனது அணியினர் மற்றும் இங்கிலாந்து அணிகளின் நிர்வாகத்திற்கு நன்றி. இது இந்த வருடத்தின் நல்ல தொடக்கமாக உள்ளது. ஆஷஸ் உடன் ஆண்கள் அணிகளுக்கு இது ஒரு பெரிய கோடை மற்றும் குளிர்காலமாக இருக்கும் மற்றும் இந்தியாவில் 50 ஓவர் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் இருக்கும், நான் இரு அணிகளிலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com