முதல் அணியாக 300 ரன்கள்: டேல் ஸ்டெயினின் கணிப்பை பொய்யாக்கிய ஐதராபாத்

ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றது.
முதல் அணியாக 300 ரன்கள்: டேல் ஸ்டெயினின் கணிப்பை பொய்யாக்கிய ஐதராபாத்
Published on

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 36 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முன்னதாக இந்த தொடர் ஆரம்பித்தபோது ஏப்ரல் 17-ம் தேதி (நேற்றைய ஆட்டம்) மும்பைக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஐ.பி.எல்.-ல் முதல் அணியாக 300 ரன்கள் அடிக்கும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன டேல் ஸ்டெயின் துணிச்சலாக கணித்திருந்தார்.

ஆனால் அவரது கணிப்பினை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 162 ரன்கள் மட்டுமே அடித்து பொய்யாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com