ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி தடுமாற்றம்

ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி தடுமாறி வருகிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி தடுமாற்றம்
Published on

மொகாலி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மொகாலியில் நேற்று தொடங்கியது. தடுமாற்றத்துடன் பேட்டிங்கை தொடங்கிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 71 ரன்னும், பாபா அபராஜித் 40 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் மன்பிரீத் கோனி 5 விக்கெட்டும், பால்தேஜ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மும்பையில் நடைபெறும் பரோடா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 85.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 439 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 178 ரன்னும் (139 பந்துகளில் 17 பவுண்டரி, 11 சிக்சருடன்), சித்தேஷ் லாத் 130 ரன்னும் விளாசினர். பரோடா அணி தரப்பில் பார்கவ் பாத் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com