மயங்க் அகர்வால் அபாரம்: உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள்

மும்பை டெஸ்ட்டில் 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்துள்ளது.
மயங்க் அகர்வால் அபாரம்: உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள்
Published on

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சஹா 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மயங்க் அகர்வால் - பட்டேல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயத்தின.

2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 146 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com