இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி : சமூக வலைதளங்களில் வைரலாகும் ரசிகையின் புகைப்படம்

இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்திய கிரிக்கெட் ரசிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி : சமூக வலைதளங்களில் வைரலாகும் ரசிகையின் புகைப்படம்
Published on

உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி இன்று நடந்து  வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தியா 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து உள்ளது. கோலி 67 ரன்களில் அவுட் ஆனார்.  

இந்த போட்டியை காண இந்திய ரசிகை ஒருவர் கனடாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார். அந்த ரசிகை மைதானத்தில் நின்றபடி ஒரு பதாகையை கையில் வைத்துள்ளார். அதில், டோனி மற்றும் கோலியை காண்பதற்காகவே கனடாவில் இருந்து வந்துள்ளேன் என எழுதப்பட்டுள்ளது. இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com