

புதுடெல்லி,
ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணியில் இரண்டு முறை இடம் பிடித்திருந்த முன்கள வீரர் குர்ஜந்த் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 31 வயதான குர்ஜந்த் சிங் சுமார் 10 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும், 2024-ல் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. இந்தியா பதக்கம் வென்ற இந்த இரண்டு ஒலிம்பிக் போட்டியிலும் குர்ஜந்த் சிங் இடம் பிடித்திருந்தார். குர்ஜந்த் சிங் இந்திய அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார்.