ஐ.பி.எல். கிரிக்கெட் 2021; பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் 2021; பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி
Published on

மும்பை,

தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 7-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com