ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் குவிப்பு

ஐதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் குவிப்பு
Published on

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 40வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். ஜேசன் ஹோல்டர் வீசிய 4வது ஓவரில் ராபின் உத்தப்பா(19 ரன்கள்) ரன் அவுட் ஆனார். அடுத்த விக்கெட்டுக்கு சன்ஜு சாம்சன் களமிறங்கினார்.

ராஷித் கான் வீசிய 13வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ்(30 ரன்கள்) பவுல்ட் ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 9 ரன்களில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் 19 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் அணியின் ரன் வேகம் குறைந்தது.

ரியான் பராக் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. ராகுல் திவதியா(2 ரன்கள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்சர்(16 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி தற்போது விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com