அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது அதிர்ஷ்டமே - ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
image courtesy:twitter/@CricketAus
image courtesy:twitter/@CricketAus
Published on

கெய்ன்ஸ்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 53 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62 ரன்கள் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும் டிம் டேவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் அளித்த பேட்டியில், டி20 கிரிக்கெட்டில் நெருங்கி வந்து வெற்றி பெறுவது எப்போதும் இனிமையானது. இலக்கை எட்ட வைத்த மேக்ஸ்வெல்லுக்கு நன்றி. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அணிக்காக எல்லாவற்றையும் செய்கிறார். இந்த தொடரில் 3 ஆட்டத்திலும் அவர் வெவ்வேறு வரிசையில் ஆட வேண்டி இருந்தது. அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது அதிர்ஷ்டமே. அடுத்து ஒரு நாள் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம் என்று கூறினார்.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com