சென்னை ரசிகர்களுக்கு முன் விளையாடுவது அருமையாக இருக்கிறது: பிரேவிஸ் நெகிழ்ச்சி

சென்னை அணி வீரர் பிரேவிஸ் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் குவித்தார்.
சென்னை ரசிகர்களுக்கு முன் விளையாடுவது அருமையாக இருக்கிறது: பிரேவிஸ் நெகிழ்ச்சி
Published on

சென்னை,

ஐபிஎல் 2026 தொடரில், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி வீரர் பிரேவிஸ் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில், வெற்றி தொடர்பாக பேசிய பிரேவிஸ் கூறியதாவது,

சென்னையில் ரசிகர்களுக்கு முன் விளையாடுவது அருமையாக இருக்கிறது . நான் அதை ரசித்தேன்.மிகவும் சிறப்பானது, மேலும் விக்கெட்டைப் பற்றி அறிந்துகொள்ள நேரம் செலவிட்டேன். இது சற்று வித்தியாசமாக இருந்தது, எனக்குச் சற்று தன்னம்பிக்கை கூடியிருப்பதாக உணர்கிறேன். நான் வலிமையாக உணர்கிறேன், நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com